யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தலையில் குண்டுபாய்ந்ததால் மூளைச்சாவடைந்த சிறுமி பலருக்கு வாழ்வளித்தார்

தலையில் குண்டுபாய்ந்ததில் மூளைச்சாவடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

News image
தலையில் குண்டுபாய்ந்ததால் மூளைச்சாவடைந்த சிறுமி பலருக்கு வாழ்வளித்தார்
Updated On :30 ஏப்ரல் 2022, 6:07 am

PTI


புது தில்லி: தந்தையைக் கொல்ல முயன்றபோது, குறுக்கே வந்த மகளின் தலையில் குண்டுபாய்ந்ததில் மூளைச்சாவடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையத்தில், தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிகிச்சைபெற்று வந்த சிறுமி மூளைச்சாவடைந்த நிலையில் அவரது இதயம், கல்லீரல், கருவிழிகள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டது.

வெள்ளிக்கிழமையன்று, சிறுமி மூளைச்சாவடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் குறித்து உடல் உறுப்பு மீட்பு மற்றும் வங்கி அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் உறுப்பு தேவைப்படுவோரின் தகவல்கள் திரட்டப்பட்டன.

சிறுமியின் கல்லீரல், லக்னௌவைச் சேர்ந்த கல்லீரல் பாதிக்கப்பட்டு தில்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறாருக்கு பொருத்தப்பட்டது. 

இதுவரை, இந்த வயதுடைய இதயம் தேவைப்படும் நோயாளி கண்டறியப்படாததால், தேவைப்படும் நோயாளி கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதயக் குழாய்கள் பிறகு பயன்படுத்திக் கொள்ள வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறுநீரகங்களும் சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு வெள்ளிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. சிறுமியின் கருவிழிகள் இரண்டு குழந்தைகளுக்குப் பொருத்தப்பட்டு கண்பார்வை கிடைக்க வழி வகை செய்யப்பட்டது.

5 வயதாகும் சிறுமி ரோலி. அவரது தந்தையை அடையாளம் தெரியாத நபர் சுட முயன்றபோது தவறுதலாக சிறுமியின் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில்  ஏப்ரல் 28ஆம் தேதி காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில் அவரது தலைக்குள் துப்பாக்கிக் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அவரது மூளை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.  தொடர் சிகிச்சை அளித்தும் அவர் மூளைச்சாவடைந்தார். சுமார் 12 மணி நேரம் அவருக்கு தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை பிற்பகல் 11.40 மணிக்கு அவர் மூளைச்சாவடைந்தது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அவரது பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். அதற்கு பெற்றோரும் ஒப்புக் கொண்டனர். உடனடியாக உடல் உறுப்புகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு பொருத்தும் பணி தொடங்கியது.

இது குறித்து சிறுமியின் தந்தை ஹர்நாராயணன் பிரஜாபதி கூறுகையில், முதலில் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பவில்லை. பிறகு மருத்துவர்கள் எங்களிடம் பேசினர். எங்களது மகள் இப்போது இல்லை. ஆனால் உடல் உறுப்பு தானம் மூலம் பல குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் என்று கண்ணீர்மல்க கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.