பிகாரில் படகில் தீ விபத்து: 5 தொழிலாளர்கள் பலி

பிகாரில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பிகாரில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 

பிகார் மாநிலம், ராம்பூர் தியாரா காத் பகுதியில் உள்ள ஏரியில் படகு மூலம் சட்டவிரோதமாக மணல் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது படகில் சமயல் செய்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 5 பேர் பலியானார்கள். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில் டீசல் கேன்களுக்கு அருகே சமயல் செய்ததால் தீவிபத்து ஏற்பட்டதாகவும் பலியானவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com