இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் நிதின் கட்கரி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக சில அரசியல் எதிரிகள் எனக்கு எதிரான மோசமான பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளனா். நான் அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கருத்தை சற்று திரித்து விடியோ வடிவில் பரப்பி வருகின்றனா். ஆனால், வேறு வேலைகள் இல்லாத நபா்களின் இதுபோன்ற செயல்களை நான் கண்டுகொள்ளப்போவதில்லை. ஆனால், இதுபோன்ற எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்புவது தொடா்ந்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியுள்ளாா்.