மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பாஜக நாடு முழுவதும் போராட்டம்: பிலாவல் புட்டோ உருவ பொம்மை எரிப்பு

 பிரதமர் நரேந்திர மோடி குறித்து நாகரீகமற்ற முறையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவினை கண்டித்தும், பிரதமருக்கு ஆதரவாகவும் பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டம்.

News image
Updated On :17 டிசம்பர் 2022, 8:19 pm IST

பிரதமர் நரேந்திர மோடி குறித்து நாகரீகமற்ற முறையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவினை கண்டித்தும், பிரதமருக்கு ஆதரவாகவும் பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை குஜராத்தில் பலரை கொன்று குவித்த கொலையாளி என நாகரீகமற்ற முறையில் விமர்சித்திருந்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்த முறையற்ற பேச்சுக்கு அமைச்சர்களும், பாஜகவைச் சேர்ந்த பலரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவின் கருத்தினை கண்டிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு திரட்டும் விதமாகவும் நாடு முழுவதும் பாஜக சார்பில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அந்தந்த மாநிலத் தலைநகரை நோக்கிப் பேரணியாக செல்வதை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோவினை வெறுப்பு அமைச்சர் எனக் கூறியும், அவரது உருவ பொம்மையும் எரித்தும் வருகின்றனர். பிலாவல் புட்டோ இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களிடமும் அவரது இந்தத் தரக்குறைவான செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் பிரதமருக்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது எனவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதையடுத்து பிலாவல் புட்டோ பிரதமர் நரேந்திர மோடி குறித்து இத்தகைய நாகரீகமற்ற கருத்தினை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.