நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆர்ஜென்டீனா வெற்றி! 1,000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கிய ரசிகர்!

ஆர்ஜென்டீனா அணியின் வெற்றியைத் தொடர்ந்து கேரளத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

News image

பிரியாணி வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள்

Updated On :19 டிசம்பர் 2022, 8:33 pm IST


ஆர்ஜென்டீனா அணியின் வெற்றியைத் தொடர்ந்து கேரளத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கால்பந்தாட்டத்திற்கு கேரளத்தில் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கும்போதே அவர்களின் விருப்பமான வீரர்களுக்கு பெரிய அளவில் பதாகைகள் வைத்து கொண்டாடினர்.

மேலும், கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டன. 

இந்நிலையில், திருச்சூரில் உணவக உரிமையாளர் ஷிபு என்பவர், மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணியின் தீவிர ரசிகர். அவர் போட்டியின்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி வெற்றிபெற்றால் உணவகத்தில் ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்குவதாக அறிவித்தார். 

அதன்படி நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து ஷிபு, இன்று தனது உணவகத்திற்கு முதலில் வரும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி வழங்கினார். இதற்காக அவரின் கடைக்கு வெளியே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அதிக அளவில் கூட்டம் குவிந்ததால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. 

உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்கள் என்பதால், ஊழியர்களும் இடைவேளை எடுக்காமல், வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.