தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கரோனாவை எதிர்கொள்ள நாங்கள் தயார்: ஆந்திரம்

எந்த விதமான கரோனா பேராபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2022, 6:43 pm IST

எந்த விதமான கரோனா பேராபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

அரசிடம் போதுமான அளவுக்கு மனித வளம், படுக்கை வசதிகள், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் கைவசம் இருப்பதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் திடீரென வேகமெடுத்துள்ள நிலையில், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மக்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் தொடா்பாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வல்லுநா்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தில்லியில் புதன்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடா்ந்து, இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது; மேலும், நாட்டில் கரோனா பரவல் கண்காணிப்பை வலுப்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டார். மாநில அரசுகள் கரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், எந்த விதமான கரோனா பேராபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 50 நாள்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 130 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று கண்டறியப்பட்டது. கரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் ஆந்திர அரசு அதனைத் திறம்பட எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. 12,292 சாதாரணப் படுக்கைகள், 34,763 ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி கொண்ட படுக்கைகள், 8,594 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், குழந்தைகளுக்கான 1,092 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள், 5,813 வெண்டிலேட்டர்கள் மற்றும் 54,000 தனிமைப் படுத்தலுக்கான படுக்கைகள் தயாராக உள்ளன.

புதிய வகை கரோனா பரவலைக் கண்டறிய விஜயவாடாவில் தேசிய மரபணு பரிசோதனைக் கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்களுக்கு 100 சதவிதம் முன்னெச்சரிக்கை தடுப்பூசியும், முன்களப் பணியாளர்களுக்கு 93 சதவிகிதம் முன்னெச்சரிக்கை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம், கிருமிநாசினிகள், கையுறை மற்றும் கரோனா பாதுகாப்பு உடை போன்றவை போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.