'வெங்காயம், தக்காளி விலையைக் குறைக்க மோடி பிரதமராகவில்லை': பாஜக அமைச்சர்
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு விலையைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகவில்லை என்று பாஜக தலைவரும், எம்.பி.யுமான கபில் பாட்டீல் தெரிவித்துள்ளார்.


வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு விலையைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகவில்லை என்று பாஜக தலைவரும், எம்.பி.யுமான கபில் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய எம்.பி. கபில் பாட்டீல், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் சட்டம் இயற்றினார்.
காஷ்மீர் நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அவர்களது உடைமையாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒருநாள் இந்தியா வசமாகும்.
இது காங்கிரஸின் வேலை. ஆனால் இதனை நாங்கள் (பாஜக) இப்போது செய்து வருகிறோம். 2024ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும். அதனை நரேந்திர மோடி செய்து முடிப்பார்.
வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு விலையை குறைக்க வேண்டும் என்ற மனநிலையிலிருந்து வெளியே வரவேண்டும். அதற்காக பிரதமராகவில்லை நரேந்திர மோடி என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...