ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ராமானுஜர் சிலை 'மேட் இன் இந்தியா' அல்ல 'மேட் இன் சீனா': ராகுல்

சுயசார்பு இந்தியா என பிரசாரம் செய்துவரும் மத்திய அரசு, தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த சமத்துவத்திற்கான சிலை சீனாவில் உருவாக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:52 pm IST


சுயசார்பு இந்தியா என பிரசாரம் செய்துவரும் மத்திய அரசு, தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த சமத்துவத்திற்கான சிலை சீனாவில் உருவாக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான "பஞ்சலோக' சிலையாக ரூ.1,000 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாய் ராமானுஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

ராமானுஜர் சிற்பம் மேல் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் இந்தப் பூமியில் 120 ஆண்டுகள் வாழ்ந்ததை நினைவுகூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.  

அதேநேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமத்துவத்துக்கான சிலை' என வர்ணிக்கப்படும் இச்சிலையை பிரதமர் மோடி கடந்த 5 ஆம் தேதி திறந்து வைத்தார்.

Story image

இந்நிலையில், சமத்துவத்துக்கான சிலை என பெயரிடப்பட்டுள்ள ராமானுஜர் சிலையை இந்தியாவில் வடிக்கவில்லை என்றும், மாறாக சீனாவில் வடிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: எதற்கெடுத்தாலும் சுயசார்பு இந்தியா என பிரசாரம் செய்யும் மத்திய அரசு, ராமானுஜர் சிலையை வடிக்கும் பணியை மட்டும் சீனாவிடம் ஒப்படைக்க அனுமதித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதும் சிறு தொழில்களுக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே மேட் இன் இந்தியா என்ற முழக்கம் சாத்தியமாகும் என்று ராகுல் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.