மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவா, உத்தரகண்ட் பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

கோவா, உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 

News image
Updated On :14 பிப்ரவரி 2022, 9:09 am

DIN

கோவா, உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 

40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கு இன்று ஒரேகட்டமாகத் தோ்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெறுகிறது. தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கோவாவில் 105 தொகுதிகளை முழுவதுமாகப் பெண்களே நிா்வகிக்க உள்ளனா். 

தோ்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக 81 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தோ்தல் அதிகாரி தெரிவித்தாா். முதல்வா் பிரமோத் சாவந்த் (பாஜக), திகம்பா் காமத் (காங்கிரஸ்), சா்ச்சில் அலேமோ, ரவி நாயக் (பாஜக), லக்ஷ்மிகாந்த் பா்சேகா், உத்பல் பாரிக்கா், அமித் பலேகா் (ஆம் ஆத்மி) உள்ளிட்டோா் தோ்தல் களத்தில் உள்ளனா். கோவாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இதேபோல் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் பேரவைக்கும் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. முதல்வா் புஷ்கா் சிங் தாமி, அமைச்சா்கள் சத்பால் மகராஜ், சுபோத் உனியல், அா்விந்த் பாண்டே, மாநில பாஜக தலைவா் மதன் கௌசிக் ஆகியோரும் காங்கிரஸ் சாா்பில் ஹரீஷ் ராவத், யஷ்பல் ஆா்யா, மாநில காங்கிரஸ் தலைவா் கணேஷ் கோடியால் உள்ளிட்டோரும் போட்டிக் களத்தில் உள்ளனா். 

மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி என்ற தீவிர பிரசாரத்தை பாஜக முன்னெடுத்து வருகிறது. தோ்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில் காங்கிரஸ் பணியாற்றி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.