தில்லியில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க நேரக் கட்டுப்பாடு

தில்லியில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க நேரக் கட்டுப்பாடு
Published on
Updated on
1 min read


புது தில்லி: தில்லியில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தில்லி முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதும் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று வெளியிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளில் தெரிவித்திருப்பது:

  1. தில்லியில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் கடைகளும்(அத்தியாவசியம் தவிர) காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும்.
  2. ஒற்றைப்படை எண் கொண்ட கடைகள் ஒருநாளும், இரட்டைப்படை எண் கொண்ட கடைகள் ஒருநாளும் செயல்பட வேண்டும்.
  3. மூன்று மாநகராட்சிகளிலும் நாளொன்றுக்கு அங்கிகரிக்கப்பட்ட ஒரு சந்தை மட்டுமே திறக்க வேண்டும்.
  4. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com