மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாணே: விசைத்தறி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 ஜனவரி 2022, 5:57 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

காதிபார் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இன்று அதிகாலை சரியாக 1.30  மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள விசைத்தறி அலகு முழுவதும் தீ பரவியதால் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. 

இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, 5 மணி நேர போரட்டத்திற்கு பின்பு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

விசைத்தறி மற்றும் கைத்தறி போன்ற ஜவுளித் தொழிலுக்கு பிவாண்டி பெயர்  பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.