ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

'அனைத்து கரோனா வைரஸுக்கும் எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும் ஒமைக்ரான்' - ஐசிஎம்ஆர் ஆய்வு

ஒமைக்ரானால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள், அனைத்து வகை கரோனா வைரஸுக்கும் எதிராக செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

News image
Updated On :26 ஜனவரி 2022, 5:09 pm IST

ஒமைக்ரானால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள், அனைத்து வகை கரோனா வைரஸுக்கும் எதிராக செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் இருந்து அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து பல மருத்துவ அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய சமீபத்திய ஆய்வில், கரோனாவின் ஒருவகையான ஒமைக்ரானால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் எனும் நோயெதிர்ப்பு புரதங்கள், ஒமைக்ரானுக்கு எதிராக மட்டுமின்றி, டெல்டா உள்ளிட்ட பிற கரோனா வைரஸுக்கு எதிராகவும் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

'ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். மற்ற கரோனா வைரஸ்களையும் நடுநிலையாக்குவது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக டெல்டா வைரஸுக்கு எதிராக செயல்படுவதால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு. 

இதனால் ஒமைக்ரானுக்கு எதிராக தனித்திறன் மிக்க தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும்' என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆல்பா, பீட்டா, டெல்டா, ஒமைக்ரான் மற்றும் அதன் வகைகளால் பாதிக்கப்பட்ட நபரின் சீரம் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிநாட்டைச் சேர்ந்த பெரியவர்களும் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளம்பருவத்தினரும் பங்கேற்றுள்ளனர். 

இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் இரண்டு தவணை பைசர் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆன்டிபாடிகள் என்பது, தொற்று ஏற்படும்போது உடலில் இயற்கையாக ஏற்படும் அல்லது தடுப்பூசி மருந்துகள் மூலமாக செயற்கையாக ஏற்படுத்தப்படும் நோயெதிர்ப்பு புரதங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.