அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

'அனைத்து கரோனா வைரஸுக்கும் எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும் ஒமைக்ரான்' - ஐசிஎம்ஆர் ஆய்வு

ஒமைக்ரானால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள், அனைத்து வகை கரோனா வைரஸுக்கும் எதிராக செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

News image
Updated On :26 ஜனவரி 2022, 5:09 pm IST

ஒமைக்ரானால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள், அனைத்து வகை கரோனா வைரஸுக்கும் எதிராக செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் இருந்து அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து பல மருத்துவ அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய சமீபத்திய ஆய்வில், கரோனாவின் ஒருவகையான ஒமைக்ரானால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் எனும் நோயெதிர்ப்பு புரதங்கள், ஒமைக்ரானுக்கு எதிராக மட்டுமின்றி, டெல்டா உள்ளிட்ட பிற கரோனா வைரஸுக்கு எதிராகவும் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

'ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். மற்ற கரோனா வைரஸ்களையும் நடுநிலையாக்குவது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக டெல்டா வைரஸுக்கு எதிராக செயல்படுவதால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெல்டா பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு. 

இதனால் ஒமைக்ரானுக்கு எதிராக தனித்திறன் மிக்க தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும்' என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆல்பா, பீட்டா, டெல்டா, ஒமைக்ரான் மற்றும் அதன் வகைகளால் பாதிக்கப்பட்ட நபரின் சீரம் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிநாட்டைச் சேர்ந்த பெரியவர்களும் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளம்பருவத்தினரும் பங்கேற்றுள்ளனர். 

இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் இரண்டு தவணை பைசர் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆன்டிபாடிகள் என்பது, தொற்று ஏற்படும்போது உடலில் இயற்கையாக ஏற்படும் அல்லது தடுப்பூசி மருந்துகள் மூலமாக செயற்கையாக ஏற்படுத்தப்படும் நோயெதிர்ப்பு புரதங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.