திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவைக்கு அனுமதி

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 ஜூலை 2022, 3:16 pm IST

மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழந்ததைத் தொடர்ந்து மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஏக்நாத் முதல்வராகவும் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், இன்று தேவேந்திர பட்னாவிஸும் ஏக்நாத் ஷிண்டேவும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து மகாராஷ்டிரத்தில் கனமழையால்  ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறித்துப் பேசினர்.

இறுதியில்,  மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்குவது தொடர்பாக அனைத்து அனுமதிகளையும் மாநில அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம் என  பட்னாவிஸ் தெரிவித்தார்.

மேலும், பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாயும் டீசல் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என்றும் 1975 ஆண்டு அவசரநிலையின்போது சிறை சென்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.