ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

இது சூரத் மாடல்: மழையால் பல்லாங்குழியான குஜராத் சாலைகள் (விடியோ)

குஜராத்தில் கனமழை பெய்து வருவதால், சாலைகள் பலவும் பல்லாங்குழியாகிப்போயின.

News image

பல்லாங்குழியான குஜராத் சாலைகள்

Updated On :16 ஜூலை 2022, 10:03 am


ஆமதாபாத்: குஜராத்தில் ஏற்கனவே சாலைகள் மோசமாக இருப்பது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி சலசலப்பை ஏற்படுத்தும். தற்போது கனமழை பெய்து வருவதால், சாலைகள் பலவும் பல்லாங்குழியாகிப்போயின.

ஒரு மாநிலத்தின் உள்கட்டமைப்பின் தரத்தை நிர்ணயிப்பதில் முதலிடம் சாலைகளுக்குத்தான். நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமல்ல, முக்கிய நகரப் பகுதிகளிலிருக்கும் சாலைகளும் தரமாக போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குஜராத் மாநிலத்தைப் பற்றி குறை கூற வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை முதலில் கையிலெடுப்பது இந்த சாலைகளைத்தான். காரணம். அதன் நிலைமைதான்.

Story image

அதற்குச் சான்று இந்த ஒரு புகைப்படம் மட்டுமல்ல.. இதுபோன்ற சாலைகளும் புகைப்படங்களும் ஏராளமாக, சமூக வலைத்தளத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன.

குஜராத்தில் கனமழை

குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்து பல தாழ்வானப் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துமுடங்கியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து, வெள்ளம் சூழ்ந்திருப்பதால், மும்பை, டாங், கட்ச் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

பேரிடர் மீட்புப் படையினர் குஜராத் மாநிலத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.