கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இன்னுமா மாறவில்லை? நீட் தேர்வெழுத வந்த மாணவிக்கு நடந்த கொடுமை

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

News image

இன்னுமா மாறவில்லை? நீட் தேர்வெழுத வந்த மாணவிக்கு நடந்த கொடுமை

Updated On :18 ஜூலை 2022, 12:45 pm

IANS


திருவனந்தபுரம்: நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடும் கோபமடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார்அளித்துள்ளனர். திருவனந்தபுரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அயூர் பகுதி. இங்கு நேற்று நடைபெற்ற நீட் தேர்வின்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து பெற்றோர் கூறுகையில், நாங்கள் 12 மணிக்கு தேர்வு மையத்தில் எங்கள் பெண்ணை இறக்கிவிட்டோம். சிறிது நேரத்தில் துப்பட்டாவைக் கொண்டுவருமாறு கூறினார்கள். நாங்களும் கொண்டு போய் கொடுத்தோம். தேர்வு முடிந்து, எங்களது மகள் வெளியே வரும்போதுதான் என்ன நடந்தது என்பதே எங்களுக்குத் தெரிந்தது.

அவரது உள்ளாடையில் இருந்த இரும்புக் கொக்கியால், அவர் நுழைவுவாயிலில் செல்லும் போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அந்த உள்ளாடையை அகற்றினால்தான் உள்ளே நுழைய அனுமதிக்கப்படும் என்று தேர்வு அறை அதிகாரிகள் கூறிவிட்டதாகவும், அந்த தேர்வு நடந்த கல்லூரி நிர்வாகத்துக்குக் கூட இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.