ராம்நாத் கோவிந்த் பாஜகவின் கருத்துகளையே பரப்பினார்: மெகபூபா  முப்தி

ராம்நாத் கோவிந்த் பாஜகவின் அரசியல் கருத்துகளையே பரப்பினார் என ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராம்நாத் கோவிந்த் பாஜகவின் அரசியல் கருத்துகளையே பரப்பினார் என ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்ததைத் தொடர்ந்து திரௌபதி முர்மு இன்று 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். 

 மெகபூபா முப்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

பதவி விலகும் குடியரசுத் தலைவர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பல முறை காலில் போட்டு மிதித்துள்ளார். இந்திய அரசியலமைப்பினை மதிக்காமல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது, சிஏஏ அல்லது சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதான குறிவைக்கப்பட்ட தாக்குதல் போன்ற பாஜகவின் அரசியல் கருத்துகளையே அவர் நிறைவேற்றினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com