திரெளபதி முர்மு நாட்டின் முதன்மைக் குடிமகளாக பொறுப்பேற்றுள்ளது, பழங்குடி மக்களுக்கான புதிய தொடக்கம் என பழங்குடி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூலை 25) காலை பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் மரியாதையையும் ஏற்றார்.
இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பழங்குடியின நல்வாழ்வுத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதன்மைக் குடிமகளாகப் பொறுப்பேற்றுள்ளது பழங்குடி மக்களுக்கான புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. அரசியலமைப்பின் நிலைப்பாடு கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. இது புதிய வழிகளை அமைத்துக்கொடுக்கும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போராட்டத்திற்கு தட்டு, கரண்டியோடு வாருங்கள்! மோடியைக் கிண்டல் செய்த கரப்பான்பூச்சி கட்சி!

சங்கவியுடன் நடிக்க வேண்டாம்..! ரசிகையின் கடிதத்திற்குச் சுவாரஸ்யமாக பதிலளித்த விஜய்!
அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி






