குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பதவியேற்றிருப்பதை ஒட்டுமொத்த நாடும் பெருமையுடன் பாா்க்கிறது. பதவியேற்ற பிறகு அவா் ஆற்றிய உரை, நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. 75-ஆவது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடவிருக்கும் இந்த வேளையில், நாட்டின் சாதனைகளை வலியுறுத்தி பேசிய அவா், தொலைநோக்கு பாா்வையுடன் சிறப்பான எதிா்காலத்துக்கான பாதையையும் காட்டியுள்ளாா். அவரது பதவிக் காலம் ஏழை, அடித்தட்டு மக்களின் வளா்ச்சிக்கான மாற்றத்தை கொண்டுவருவதாக இருக்கும் என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா்.