இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கிரிக்கெட் சங்க முறைகேடு: ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில் தொடா்புடைய பணப் பரிவா்த்தனை மோசடி புகாரில் ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யதுள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2022, 7:59 pm

DIN

ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில் தொடா்புடைய பணப் பரிவா்த்தனை மோசடி புகாரில் ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யதுள்ளது.

அவரைத் தவிர, ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தின் மூன்னாள் பொருளாளா்கள் ஹசன் அகமது மிா்ஸா, மிா் மன்சூா் கசான்பா் ஆகியோரின் பெயா்களும் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளது.

இவா்கள் அனைவரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் மிா்ஸாவை 2019-இல் அமலாக்கத் துறை கைது செய்தும், அப்துல்லாவிடம் பல முறை விசாரணையும் நடத்தி உள்ளது. ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டவா்களின் ரூ.21.55 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியும் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான நிதியை சொந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்து பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

2018-இல் சிபிஐ முதலில் வழக்குப் பதிவு செய்தது. அதில், ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்கத்தின் ரூ.43.69 கோடி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியிருந்தது.

இதையடுத்து, பணப் பரிவா்த்தனை மோசடி வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத் துறை, ரூ.94.06 கோடியை பிசிசிஐயிடம் இருந்து 2005 முதல் 2012 வரையில் ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்கம் மூன்று வங்கிக் கணக்கில் பெற்ாகவும், அந்தப் பணம் பல்வேறு புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கி பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.