ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்திக்கு புதிய சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஜூன் 2022, 4:53 pm

DIN


நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு முன்பு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், கரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டார். இதனால், விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறையிடம் அவகாசம் கோரினார் சோனியா காந்தி.

இதைத் தொடர்ந்து, ஜூன் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அவரது மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஜூன் 13-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.