முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

என்ன, மத்திய அரசு ஊழியர்கள் இனி இதையெல்லாம் பயன்படுத்தக் கூடாதா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு அனுப்பியிருக்கும் அறிவுறுத்தலில், கூகுள் டிரைவ், விபிஎன் உள்ளிட்ட சில இணைய வசதிகளை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

News image
என்ன, மத்திய அரசு ஊழியர்கள் இனி இதையெல்லாம் பயன்படுத்தக் கூடாதா?
Updated On :18 ஜூன் 2022, 5:59 am

DIN

புது தில்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு அனுப்பியிருக்கும் அறிவுறுத்தலில், கூகுள் டிரைவ், விபிஎன் உள்ளிட்ட சில இணைய வசதிகளை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சில ரகசிய ஆவணங்கள் வெளியில் கசியாமல் தடுக்கும் வகையில், பல முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகக் கணினியில் விபிஎன், டிராப்பாக்ஸ், கூகுள் டிரைவ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

அரசு அலுவலகக் கணினிகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய மற்றும் ரகசியம் காக்கப்பட வேண்டிய மத்திய அரசின் ஆவணங்களை இவற்றில் சேமித்து வைக்கக் கூடும் என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல விபிஎன் போன்ற சேவைகளாலும் அரசின் ரகசிய ஆவணங்கள் கசியும் ஆபத்து நேரிடும் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்ல, மத்திய அரசு ஊழியர்கள், அலுவலக ஆவணங்களை கேம்ஸ்கேனர் போன்ற மூன்றாம்நபர் ஆப்ளிகேஷன்கள் போன்றவற்றையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. 

இதன் மூலம் மத்திய அரசின் ஆவணங்களை ஸ்கேன் செய்து பயன்படுத்தும் அல்லது வெளியிடும் அபாயம் இருப்பதால் இதற்கும் தடை வந்துள்ளது.

மேலும், மத்திய அரசு அலுவலர்கள், ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசிகளை ரூட் செய்வதற்கும், ஜெயில்பிரேக் செய்வதற்கும் கூட தடை விதிக்கப்படுகிறது.

இவையெல்லாம், மத்திய அரசின் அலுவலக மற்றும் ரகசிய ஆவணங்கள் வெளியில் கசியாமல் இருக்க முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் இணைய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் ஒன்றுபோல கடைபிடிக்க வேண்டும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.