மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான பணமோசடி வழக்கில் 5-வது நாளாக நாளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2022, 4:23 pm

DIN


நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான பணமோசடி வழக்கில் 5-வது நாளாக நாளையும் (ஜூன் 21) விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் மூன்று நாள்கள் தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அவருக்கு அழைப்பாணை அனுப்பியது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தாயாரும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியுள்ளதால், வெள்ளிக்கிழமை ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ராகுல் காந்தி கோரியிருந்தார். இதையடுத்து, திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை கூறியது.

இதன்படி, நான்காவது நாளாக இன்று அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார் ராகுல் காந்தி. அமலாக்கத் துறை அவரிடம் மொத்தம் 38 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், நாளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.