சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பரபரப்பான அரசியல் சூழல்: சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மகாராஷ்டிரத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சிவசேனை தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.

News image

சரத் பவார் - உத்தவ் தாக்கரே

Updated On :24 ஜூன் 2022, 11:19 pm IST

மகாராஷ்டிரத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சிவசேனை தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவசேனை கட்சியின் மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். 

தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிவசேனை கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது கூட்டணியின் அரசியல் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.