விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரதமர் மோடியுடன் கோவா பாஜக தலைவர்கள் சந்திப்பு

கோவா முதல்வர் வேட்பாளர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். 

News image

பிரமோத் சாவந்த் உள்ளிட்ட கோவா பாஜக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி

Updated On :16 மார்ச் 2022, 8:11 am

DIN

கோவா முதல்வர் வேட்பாளர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். 

நடந்துமுடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து உ.பி., உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்தது. 

கோவாவில் பாஜக தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு ஓா் இடம் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், சுயேச்சைகளிடம் ஆதரவைப் பெறுகிறது. 11 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ள காங்கிரஸ் மீண்டும் எதிா்க்கட்சியாகவுள்ளது. அங்கு ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Story image

கோவாவில் பாஜக வெற்றியை அடுத்து, கோவாவின் தற்காலிக முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் மாநில பாஜக தலைவர்கள் இன்று தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் கோவாவில் ஆட்சி அமைப்பது குறித்தும் பேசியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.