ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

கோவிஷீல்டு 2ம் தவணை கால இடைவெளி குறைகிறது: தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை குறைக்க நோய்த்தடுப்புக்கான  தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறுவுறுத்தியுள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2022, 7:55 pm IST

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை குறைக்க நோய்த்தடுப்புக்கான  தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறுவுறுத்தியுள்ளது.

12 முதல் 16 வாரங்கள் உள்ள கோவிஷீல்டு இடைவெளியை 8 முதல் 16 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால், கரோனா பரவல் விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 12 முதல் 16 வயதுடைய சிறார்களுக்கும் தற்போது தனி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இரண்டு தவணையாக போடப்படும் தடுப்பூசியில், கோவிஷீல்டு இரண்டாவது தவணைக்கு  தடுப்பூசிக்கு 12 முதல் 16 வாரங்கள் கால இடைவெளி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதனைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இது பரிந்துரை மட்டுமே என்றும், இதில் எந்தவொரு இறுதி வரையறையும் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்வோரை ஊக்கப்படுத்தவும், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு காத்திருப்போருக்காவும் மட்டுமே பரிந்துரைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.  

இதுவரை இந்தியாவில் 181.21 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 1.50 கோடி மட்டுமே கோவேக்ஸின் என்று மத்திய அரசு தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.