ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

‘சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் பாதிப்பு’: மம்தா விமர்சனம்

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வின் மூலம் நாட்டு மக்களை மத்திய அரசு துன்புறுத்தி வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

News image
மம்தா பானர்ஜி
Updated On :1 பிப்ரவரி 2024, 9:11 am

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வின் மூலம் நாட்டு மக்களை மத்திய அரசு துன்புறுத்தி வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.50 உயர்த்தி மத்திய அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளையின் விலை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக சனிக்கிழமை பேசிய மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் மத்திய அரசு நாட்டு மக்களை வஞ்சித்து வருவதாகவும், மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு எனும் பெயரில் பெரும் கொள்ளை நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

முன்னதாக கடந்த 2 மாதத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.