மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

20 ஆண்டுகளில் முதல் முறை.. தீபாவளிக்குக் குறைந்த பணப்புழக்கம்

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படும் வாரத்தில், நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
20 ஆண்டுகளில் முதல் முறை.. தீபாவளிக்குக் குறைந்த பணப்புழக்கம்
Updated On :3 நவம்பர் 2022, 12:45 pm

DIN

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படும் வாரத்தில், நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகோரேப் பெயரில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டதால், இந்தியாவின் பணம் செலுத்தும் முறையானது படிப்படியாக வளர்ந்து, இந்தியாவின் பணத்தை முதன்மையாகக் கொண்ட பொருளாதார அமைப்பானது, தற்போது எண்ம பணப்பரிமாற்ற முறைக்கு மாறியிருப்பதாகக் கூறியிருக்கிறது.

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாகவே இது நடந்திருப்பதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை எண்ம முறையில் மாற்ற பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ, பிபிஐ உள்ளிட்ட பல்வேறு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், பணத்தை பரிமாற்றம் செய்வது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டது. வங்கியில் கணக்கு வைத்தில்லாதவர்கள் கூட இதனைப் பயன்படுத்தும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

க்யூஆர் கோடு, என்எஃப்சி உள்ளிட்டவைகளால், இது மேலும் விரிவடைந்திருப்பதாகவும், இந்த முறைக்குள் மிகப்பெரிய நிறுவனங்களும் நுழைந்திருப்பதால் வேகம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.