ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

20 ஆண்டுகளில் முதல் முறை.. தீபாவளிக்குக் குறைந்த பணப்புழக்கம்

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படும் வாரத்தில், நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

20 ஆண்டுகளில் முதல் முறை.. தீபாவளிக்குக் குறைந்த பணப்புழக்கம்

Updated On :3 நவம்பர் 2022, 6:15 pm IST

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படும் வாரத்தில், நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகோரேப் பெயரில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டதால், இந்தியாவின் பணம் செலுத்தும் முறையானது படிப்படியாக வளர்ந்து, இந்தியாவின் பணத்தை முதன்மையாகக் கொண்ட பொருளாதார அமைப்பானது, தற்போது எண்ம பணப்பரிமாற்ற முறைக்கு மாறியிருப்பதாகக் கூறியிருக்கிறது.

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாகவே இது நடந்திருப்பதாகவும், நாட்டின் பொருளாதாரத்தை எண்ம முறையில் மாற்ற பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ, பிபிஐ உள்ளிட்ட பல்வேறு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், பணத்தை பரிமாற்றம் செய்வது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டது. வங்கியில் கணக்கு வைத்தில்லாதவர்கள் கூட இதனைப் பயன்படுத்தும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

க்யூஆர் கோடு, என்எஃப்சி உள்ளிட்டவைகளால், இது மேலும் விரிவடைந்திருப்பதாகவும், இந்த முறைக்குள் மிகப்பெரிய நிறுவனங்களும் நுழைந்திருப்பதால் வேகம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.