அந்தமான் நிக்கோபர் தீவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான நிக்கோபர் தீவின் போர்ட்பிளேரின் தென்கிழக்கே வியாழக்கிழமை அதிகாலை 2.29 மணிணிக்கு (உள்ளூா் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 4.3 அலகுகளாகப் பதிவானதாகவும், 10 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் அதிா்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.