ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டம் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க | எங்கெங்கு காணினும் வாரிசு அரசியல்!
சேதமடைந்துள்ள பேருந்தின் முன்பகுதி
இதில், 13 வயது சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சம்பா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த காயமடைந்துள்ள 7 பேர் வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சம்பா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் பாரத் பூஷன் தெரிவித்தார்.