டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கட்சியில் யாரிடமும் கோபமில்லை: சசி தரூர்

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள யார் மீதும் எனக்கு கோபமில்லை என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 நவம்பர் 2022, 9:23 am

DIN

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள யார் மீதும் எனக்கு கோபமில்லை என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் கொச்சியில் நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: நான் கட்சியில் உள்ள யாருக்கும் எதிராக எதுவும் பேசவில்லை. கட்சியின் வழிகாட்டுதலை மீறியும் நடக்கவில்லை. இருப்பினும், இதுபோன்ற சர்ச்சைகள் எவ்வாறு உருவாகிறது என்பது எனக்குப் புரியவில்லை. நான் மனவருத்ததிலும் இல்லை, யார் மீதும் கோபமாகவும் இல்லை. நான் யார் மீதும் பழிசுமத்தவில்லை. என்னுடைய தரப்பில் இருந்து எந்த ஒரு புகாரும் தரப்படவில்லை. எங்களுக்குள் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. நான் என் கட்சியில் உள்ளவர்களிடத்தில் பேசவும், அவர்கள் என்னிடத்தில் பேசவும் எதற்காக தயங்கப் போகிறோம் என்றார்.

அண்மையில் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், சசி தரூரின் பெயரினைக் குறிப்பிடாமல்  கட்சியில் தனித்து செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.