இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஏ.எஸ்.சிவக்குமார் கூறியதாவது: “ இந்த புதிய அறிவிப்பினை பின்பற்றதாவர்களுக்கு முதல் முறை ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும். தொடர்ந்து விதிகளை மீறி வரும் நிலையில் அவர்களது வாகன ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். தலைக்கவசம் அணிவது தவிர்த்து, வாகனங்கள் ஓட்டும்போது கைப்பேசியில் பேசிக் கொண்டு செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்னதாக தலைக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்ற போதிலும் தற்போது அதிகரித்து வரும் விபத்துகளால் தலைக்கவம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.