குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு ஞாயிற்றுக்கிழமை கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இது குறித்து குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அவா் மருத்துவமனையில் இருந்து குடியரசுத் தலைவா் மாளிகைக்குத் திரும்பினாா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.