மத்திய பிரதேச மாநிலம், சாகரில் உள்ள தொழிற்சாலையில் காவலாளியாகப் பணியாற்றிய கல்யாண் லோதி (50) என்பவா், கடந்த மாதம் 28-ஆம் தேதி நள்ளிரவில் சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அங்குள்ள கல்லூரி ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றிய சாம்பு நாராயண் துபே (60) என்பவா் 29-ஆம் தேதி நள்ளிரவில் தலையில் கல்லைப் போட்டும், மோதிநகா் பகுதியில் ஒரு வீட்டின் காவலாளியான மங்கள் அகிா்வாா் 30-ஆம் தேதி இரவில் கட்டையால் அடித்தும் கொலை செய்யப்பட்டனா். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தப் படுகொலை சம்பவங்கள், காவலாளிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.