வேலைவாய்ப்பில் பெண்கள், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தொடர் பாகுபாடு காட்டப்படுவதாக சமீபத்தில் வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆக்ஸ்பாம் அறிக்கை சமூகத்தில் நிலவும் அசமத்துவம் தொடர்பாக அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தேசிய பாகுபாடு அறிக்கை 2022ஐ சமீபத்தில் வெளியானது. மத்திய அரசின் 2004 முதல் 2020 வரையிலான தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தரவுகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க | மருத்துவமனை தூய்மை பணியாளரை கரம் பிடித்த பெண் மருத்துவர்
கரோனா தொற்று பேரிடர் காலத்தின் முதல் காலாண்டில் கிராமப்புற பகுதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களைக் காட்டிலும் இஸ்லாமியர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி இஸ்லாமியர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 31.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதேபோல் ஆண்களுடன் ஒப்பிடுகையில் சமமான கல்வித் தகுதி மற்றும் வேலை அனுபவம் பெற்றிருந்த போதிலும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதிலும், வேலைக்கான ஊதியம் வழங்குவதிலும் தொழிலாளர் விரோதப் போக்குகள் கடைபிடிக்கப்படுவது தொடர்வதாக ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.
பணி செல்லும் பெண்களில் 67 சதவிகிதமானவர்களுக்கு பாலின பாகுபாடு காரணமாகவும், 33 சதவிகிதமானவர்களுக்கு போதிய அனுபவமின்மை காரணமாகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஆய்வு முடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெண்கள் வேலைவாய்ப்புகளில் பங்கெடுக்கும் விகிதம் 2020-21ஆம் ஆண்டில் 25.1 சதவிகிதமாக உள்ளதாகவும் இதுவே 2004-05ஆம் ஆண்டில் 42.7 சதவிகிதமாக இருந்ததையும் ஆய்வு முடிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிக்க | விருதுகளைக் குவிக்கும் ‘ஸ்குவிட் கேம்’
பெண்கள் மட்டுமல்லாது பட்டியலினத்தவர்கள், பழங்குடியினவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆகியோர் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், விவசாயப் பலன்களைப் பெறுதல் போன்றவற்றில் ஒடுக்கப்படுவதாக ஆக்ஸ்பாம் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பட்டியலின மக்கள் ஊதியம் பெறுவதில் பெரும் ஒடுக்குமுறை நிகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை நகர்ப்புற பகுதிகளில் பட்டியலின வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ரூ.15,312ஐ ஊதியமாகப் பெறும் நிலையில் பொதுப்பிரிவினர் 33 சதவிகிதம் அதிகமாக ரூ.20346ஐ ஊதியமாகப் பெறுகின்றனர் எனவும் ஆக்ஸ்பாம் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச் சந்தை நஷ்டத்தால் விரக்தி: யூடியூபருக்கு தென்கொரிய இளைஞா் கத்திக்குத்து

பாகிஸ்தானில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 உயிரிழப்பு
தவெக தலைமையில் விரைவில் கூட்டணி - தொல். திருமாவளவன்

முதல் காலாண்டில் டெக் மஹிந்திரா லாபம் ரூ.1,465 கோடி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



