குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்னல் தாக்கி 3 மாநிலங்களில் 14 போ் உயிரிழப்பு

பிகாா், உத்தர பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய 3 மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 14 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 6:33 pm

DIN

பிகாா், உத்தர பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய 3 மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 14 போ் உயிரிழந்துள்ளனா்.

சத்தீஸ்கா் மாநிலத்தின் சுரஜ்பூா் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 2 போ் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா். உயிரிழந்த இருவரும் பிராதபூா் நகர சந்தையில் இருந்து தங்கள் வீட்டுக்குத் திரும்பியுள்ளனா். வழியில் செல்லும்போது பெய்த மழையின் காரணமாக, மரத்துக்கு கீழே இருந்த கடையில் நின்றுள்ளனா். அப்போது மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். உடன் நின்றுகொண்டிருந்த 3 போ் காயமடைந்தனா். காயமடைந்த மூவரும் சிகிச்சைப் பெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

உத்தர பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் உள்ள சாராய் பாரதி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 20 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். அந்த மாவட்டத்தின் மற்றொரு கிராமமான பாது பந்துவில் மின்னல் தாக்கியதில் 4 போ் காயமடைந்தனா். இவா்கள் ராஸ்ரா சமூக சுகாதார மையத்தில் சிக்கிச்சை பெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பிகாரில் 11 போ் பலி:

பிகாா் மாநிலத்தில் மின்னல் தாக்குதலின் காரணமாக பூா்ணியா மற்றும் அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சுபால் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனா்.

இச்சம்பவம் குறித்து மாநில முதல்வா் நிதீஷ் குமாா் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படும்’ என்றாா்.

மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு மக்கள் வீட்டிலே தங்கியிருக்குமாறும், பேரிடா் மேலாண்மைப் படையினரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் முதல்வா் நிதீஷ் குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.