திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

நொய்டாவில் சுவர் சரிந்து விபத்து: 4 பேர் பலி; 9 பேர் படுகாயம்

நொய்டாவில் சுவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகினர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர். 

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 6:32 am

நொய்டாவில் சுவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகினர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில்  செக்டார் 21ல் உள்ள ஜல் வாயு விஹார் சொசைட்டி அருகே சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

Story image

தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்று நொய்டா போலீஸ் கமிஷனர் அலோக் சிங் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.