நொய்டாவில் சுவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகினர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டார் 21ல் உள்ள ஜல் வாயு விஹார் சொசைட்டி அருகே சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்று நொய்டா போலீஸ் கமிஷனர் அலோக் சிங் கூறினார்.