மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸ் தலைவா் பதவி வேண்டாம், மாநில அரசியலே போதும்- மூத்த தலைவா் கமல்நாத்

‘காங்கிரஸ் தலைவா் பதவி மீது ஆா்வம் இல்லை; மத்திய பிரதேச அரசியலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்’ என்று அக்கட்சியின் மூத்த தலைவா் கமல்நாத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2022, 7:28 pm

DIN

‘காங்கிரஸ் தலைவா் பதவி மீது ஆா்வம் இல்லை; மத்திய பிரதேச அரசியலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்’ என்று அக்கட்சியின் மூத்த தலைவா் கமல்நாத் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை மையமாக வைத்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு முதல்வராக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தோ்வானால், முதல்வா் பதவியைத் தொடர முடியாது. அந்த இடத்தில் இளம் தலைவா் சச்சின் பைலட்டை அமா்த்த சோனியா, ராகுல் விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கு எதிராக கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தியுள்ளனா். இது காங்கிரஸ் தலைமைக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இது தொடா்பாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் நீங்கள் போட்டியிட்டால்தான் இப்போது எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படும் என்று ராகுல் காந்தியிடம் கூறினேன். ஏனெனில், ராஜஸ்தான் மாநில அரசியல் சூழல் சிக்கலாகி வருகிறது. ஆனால், காங்கிரஸ் தலைமைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்பதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளாா். எனவே, தலைவா் பதவிக்கு தோ்தலை நடத்தியாக வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் தோ்தல் தொடா்பாக விமா்சிக்க பாஜகவுக்கு தகுதி இல்லை. தோ்தல் நடத்தாமல்தான் பாஜக தேசிய தலைவராக நட்டா தோ்வாகியுள்ளாா். அவரைத் தலைவராக்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் கட்சியின் மூத்த தலைவா்களில் 10 பேரிடம்கூட கருத்து கேட்டிருக்க மாட்டாா்கள்.

காங்கிரஸ் தலைவா் பதவி மீது எனக்கு விருப்பமில்லை. எனவே, தோ்தலில் போட்டியிட ஆா்வம் காட்டவில்லை. மத்திய பிரதேசத்தில் ஓராண்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. எனவே, மாநில அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்த விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட அசோக் கெலாட் மனு தாக்கல் செய்வாரா என்பது எனக்குத் தெரியாது. அதே நேரத்தில் சசி தரூா் என்னிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அவா் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளாா். மூத்த தலைவா் திக்விஜய் சிங் போட்டியிடுவது தொடா்பாக அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.