'நட்புரீதியான போட்டி' - சசி தரூருடன் திக்விஜய் சிங் சந்திப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். 
'நட்புரீதியான போட்டி' - சசி தரூருடன் திக்விஜய் சிங் சந்திப்பு
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். 

கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன்(செப். 30) முடிவடைகிறது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் முதல்வர், அந்த மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகிய இருவரும் தற்போது களத்தில் உள்ளனர். 

இந்நிலையில், போட்டியாளர்கள் இருவரும் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். 

சந்திப்பு குறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று பிற்பகல் என்னை சந்திக்க வந்த திக்விஜய் சிங்கை வரவேற்றேன். கட்சியின் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். எங்கள் போட்டி சண்டை அல்ல, சக ஊழியர்களுக்கு இடையேயான நட்புரீதியான போட்டி என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். நாங்கள் இருவரும் விரும்புவது யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்பதுதான்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com