தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜிநாமா?

லஞ்சப் புகார் தெரிவித்த ஒப்பந்தக்காரர் உயிரிழந்த விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

News image
கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜிநாமா
Updated On :15 ஏப்ரல் 2022, 3:33 pm

DIN

லஞ்சப் புகார் தெரிவித்த ஒப்பந்தக்காரர் உயிரிழந்த விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

பெலகாவியைச் சேர்ந்த அரசு சிவில் ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டீல், அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது கடந்த மார்ச் 30-ஆம் தேதி குற்றம் சாட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்.12-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் தனது மரணத்திற்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் பலத்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கே.எஸ்.ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ராஜிநாமா கடிதத்தை நாளை முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.