சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை, பாஜகவுக்கு பெருமுதலாளிகளின் நலன் மட்டுமே தேவைப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கர்நாடகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சிறு மற்றும் குறு தொழில்கள் மூலம் கிடைக்கும் உற்பத்தி எதுவும் இந்தியாவுக்கு வேண்டாம் என பாஜக நினைக்கிறது.
பாஜக தங்களுக்கு விருப்பமான 2 - 3 பெரு முதலாளிகளிடமிருந்து மட்டுமே அனைத்தும் வர வேண்டும் என நினைக்கிறது. மக்களின் பைகளிலிருந்து பணத்தை எடுத்து பெருமுதலாளிகளிடம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் எனத் தெரிவித்தார்.