நிர்வாணப் புகைப்பட விவகாரம்: நடிகர் ரன்வீர் சிங் நேரில் ஆஜராக சம்மன்

நிர்வாண படங்களைப் பகிர்ந்த புகாரின் அடிப்படையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நேரில் ஆஜராக மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது.
நிர்வாணப் புகைப்பட விவகாரம்: நடிகர் ரன்வீர் சிங் நேரில் ஆஜராக சம்மன்

நிர்வாண படங்களைப் பகிர்ந்த புகாரின் அடிப்படையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நேரில் ஆஜராக மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாணமாக இருக்கும் படங்களைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது.

நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்த புகாரின் அடிப்படையில் நடிகர் ரன்வீர் சிங்கின் மீது மும்பை செம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி மும்பை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக நேரில் அவரது இல்லத்திற்கு சென்று காவல்துறை அதிகாரிகள் அவர் வீட்டில் இல்லாததைத் தொடர்ந்து அங்கிருந்து திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com