நாட்டில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது.
தில்லியிலும், அதைத்தொடர்ந்து உத்தரப்பரதேசத்திலும் போலி பல்கலைக்கழகங்கள் அதிகம் இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தில்லியில் 8 பல்கலைக்கழகங்கள், உத்தரப்பரதேசத்தில் 7 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
கர்நாடகம், மகாராஷ்டிரம், புதுச்சேரி, ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் உள்ளன.
இந்த 21 போலி பல்கலைக்கழகங்கள் எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை என்று யுஜிசி தெரிவித்துள்ளது.