ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுலுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இணைய உள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சோனியா வியாழக்கிழமை காலை ஜெய்ப்பூர் வந்துள்ளார். அவர் ஹெலிகாப்டரில் பூண்டிக்கு வர திட்டமிடப்பட்டுள்ளார். அங்கு அவரது மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியுடன் இன்றைய நடைப்பயணத்தில் இணைய உள்ளார்.
இதைத்தொடர்ந்து ராகுலுடன் 24 கி.மீ அணிவகுத்துச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சோனியா காந்தியின் பிறந்த நாளான டிசம்பர் 9-ம் தேதி இந்த நடைப்பயணத்துக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. டிசம்பர் 10-ம் தேதி முதல் நடைப்பயணம் மீண்டும் தொடங்கும்.
டிச.5-ம் தேதி ராஜஸ்தானின், ஜலவார் மாவட்டத்திலிருந்து தனது ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி.
ராஜஸ்தான், ஜலவார், கோட்டா, பூண்டி, சவாய் மாதோபூர், தௌசா மற்றும் அல்வார் மாவட்டங்கள் வழியாக சுமார் 500 கி.மீ தூரத்தை 17 நாள்களுக்குள் கடந்து டிசம்பர் 21-ம் தேதியன்று ஹரியாணாவுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத்

காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

எனது சான்றிதழைக் காட்டுகிறேன், அந்த பேரரசர் தனது டிகிரி சான்றிதழைக் காட்டத் தயாரா? அபிஜீத் தீப்கே

விரைவில் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



