அனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் தொண்டர்களை அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | 'அக்னிபத்' திட்டம் ராணுவத்தை பலவீனமாக்கும்: ராகுல் காந்தி
இந்நிலையில், அனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களை இன்று மாலை ராகுல் காந்தி சந்திக்கவுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குத் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் 5 நாள்கள் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில், கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நாளை ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.