மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்ட விண்கலத்தின் பூஸ்டர் சோதனையை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவுத் திட்டம் ககன்யான். ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் பூஸ்டர் சோதனை வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நடத்தப்பட்டது.
இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரில் ஓடும் பேருந்தில் தீ: 4 பேர் பலி
சக்திவாய்ந்த ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட்டின் ஹெச்எஸ் 200 பூஸ்டர் சோதனை 203 டன் எரிபொருளுடன் நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது 700 அளவுகோல்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த சோதனையின் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மேலும் வளர்ச்சியடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









