புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சீனாவில் புதிய உச்சம் தொட்டது கரோனா பாதிப்பு!

சீனாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2022, 2:45 am

DIN

சீனாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது சீனாவில்தான். அதன்பிறகு உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்றால் பல நாடுகள் சீரழிந்தது. லட்சக்கணக்கானோர் பலியாகினர்.

உலகம் முழுவதும் மூன்று அலைகள் ஏற்பட்ட போதிலும், கடுமையான பொதுமுடக்கத்தின் காரணமாக சீனா மட்டும் பெரும் பாதிப்பிலிருந்து தப்பித்தது.

இந்நிலையில், சமீபகாலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.

நேற்று ஒரே நாளில் 31,454 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இதுவே ஒருநாள் அதிக பாதிப்பாகும்.

தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு தீவிர கரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.