கண்ணூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் வீடு அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மட்டனூர் போலீசார் கூறுகையில், ஆர்எஸ்எஸ் தொண்டரான சுதீஷ் என்பவரது வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் வியாழக்கிழமை இரவு வெடிகுண்டு வெடித்தது. நிகழ்விடத்துக்கு வந்த தடயவியல் குழுவினர் தடயங்களை சேகரித்தனர்.
இதையும் படிக்க- ஜார்க்கண்ட்: இரண்டே நாளில் பாலம் கட்டிய கிராம மக்கள்
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் மாவட்ட காவல்துறை தலைவரும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். சுதீஷ் மீது பல வழக்குகள் உள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே மற்றொரு சம்பவத்தில், கண்ணவத்தில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் தொண்டர் சலாவுதீன் வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை வெடிகுண்டு வெடித்தது. இதுகுறித்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.