மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வைரத்தைப் பட்டை தீட்டும் சூரத் சிறைக் கைதிகள்: ஊதியம் ரூ.20 ஆயிரம்

அவர்களது வாழ்வு ஜொலிக்காவிட்டாலும் கூட, அவர்கள் தேர்ந்தெடுத்து பட்டை தீட்டும் வைரங்கள் ஒன்று கூட ஜொலிக்காமல் போய்விடுவதில்லை.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2023, 6:52 am

DIN

சூரத்: அவர்களது வாழ்வு ஜொலிக்காவிட்டாலும் கூட, அவர்கள் தேர்ந்தெடுத்து பட்டை தீட்டும் வைரங்கள் ஒன்று கூட ஜொலிக்காமல் போய்விடுவதில்லை.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள லஜ்போர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், மாதந்தோறும் சராசரியாக 25,0000 சிறிய இயற்கை வைரங்களைப் பட்டை தீட்டி விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

YouTube video thumbnail

உலகின் வைரத் தேவையில் 95 சதவீதத்தை பூர்த்தி செய்வது இந்த வைர நகரமான சூரத் தான். இந்த நகரில் அமைந்துள்ள சிறைக் கூடம் சிறியதுதான். ஆனால், இந்த 95 சதவீத வைர உற்பத்தியில், இவையும் மிகப்பெரிய பங்கெடுத்துக் கொள்கின்றன. சிறைச்சாலையில் அமைந்துள்ள வைரம் பட்டை தீட்டும் ஆலையில் 107  சிறைக் கைதிகள் நாள்தோறும் பணியாற்றுகிறார்கள். 

இவர்களுக்கு இதற்கென சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு, பட்டை தீட்டுதல், வைரத்தை வெட்டுவது போன்றப் பணிகளை செய்து மாதந்தோறும் சிறைச்சாலையில் இருந்துகொண்டே ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் ஈட்டுகிறார்கள்.

உலகிலேயே, வைரம் பட்டை தீட்டும் ஆலை செயல்படுவது இந்த சிறைச்சாலையில்தான் என்று சொன்னால் அது தவறாக இருக்காது என்றே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சுமார் 3 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த சிறைச்சாலையில், தற்போது ஏராளமான தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கிருந்தே அவர்கள் மாதந்தோறும் பல ஆயிரம் வருவாய் ஈட்டுகிறார்கள. அதில் மாதந்தோறும் அவர்கள் ரூ.2100 வரை தங்களது தேவைக்காக செலவு செய்யலாம். மற்றவை சேமிப்பாக மாறும் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு மாதந்தோறும் அனுப்பிவைக்கப்படும்.

இதன் மூலம், குற்றங்கள் செய்து சிறைக்கு வந்தவர்களும், நல்ல பயிற்சி மற்றும் வருவாய் மூலம், சிறையில் இருந்து திரும்பினால், மீண்டும் குற்றங்களைச் செய்யாமல், வைரம் பட்டை தீட்டி நல்ல ஊதியம் பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்னுவதெல்லாம் பொன் அல்ல.. வைரமாகக் கூட இருக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.