புதுதில்லி: இந்தியா கூட்டணி கட்சிகளின் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள், நாளை (வியாழக்கிழமை) இடைநீக்க நடவடிக்கையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் ‘மாதிரி நாடாளுமன்றம்’ அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இதற்கான திட்டமிடுதல் கூட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
ஜந்தர் மந்தரில் நடக்கவிருக்கும் இந்தப் போராட்டத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 140 எம்.பி.க்களும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதிரி நாடாளுமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.பி. மனோஜ், அவைத் தலைவராக இருப்பார் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ஜனநாயகத்தை தகா்க்கும் பாஜக அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அமளியில் ஈடுபட்டதாக 140-க்கும் அதிகமான எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

