தில்லியில் பிஎன்பி வங்கியில் தீ விபத்து

தில்லியில் பிஎன்பி வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. 
தில்லியில் பிஎன்பி வங்கியில் தீ விபத்து
Published on
Updated on
1 min read

தில்லியில் பிஎன்பி வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. 

தலைநகர் தில்லியின் கரோல் பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதேசமயம் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறையினர் கூறினர். தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகாலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com